டிரைவர் தற்கொலை!! குத்தலாம் அருகே பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


திருவாவடுதுறையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் அவரது மகன் சரவணன்(29). அவர் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தார். 

கடந்த 3 மாதங்களாக சரவணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாக சரவணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். 

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனே சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

suicide in kutralam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->