ஐந்து குழந்தைகளை விட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்.! காரணத்தை கேட்ட பொதுமக்கள் கண்ணீரில் கதறல்.!
suicide in karur
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையை தங்கவேல் என்பவருக்கு சங்கீதா என்ற 29 வயது மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தங்கவேல் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக சங்கீதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
அவரது வீட்டின் அருகே சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீடு என்பதால் சங்கீதாவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தையில் இருந்துள்ளார். சங்கீதா கணவனை இழந்து தனியாக வசித்து வருவதால், அவரை பாலியல் ரீதியாக இவர் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார்.
இதன் காரணமாக பயந்துபோன சங்கீதா தனது பெற்றோரின் ஊழியருக்கு குழந்தைகளுடன் சென்று விட்டுள்ளார். அவர் வெளியூருக்கு சென்றபொழுதும் தொடர்ந்து சங்கர் சங்கீதாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து முயற்சித்துள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான சங்கீதா வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சங்கீதாவின் சகோதரரான சதீஷ் தோகமலை காவல்நிலையத்தில் புகார் செய்து உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிளி சோதிடர் சங்கர் சங்கீதாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது. ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்டு சங்கீதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தோகைமலைப்பகுதி பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.