பணியில் இல்லாத அரசு மருத்துவருக்கு ஆப்பு.!! அதிரடி காட்டிய மா.சு.!! கடும் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணியில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உரிய நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளமாறு சுகாதார பணியாளர்கள் துணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

மேலும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்தை சோதனை செய்த போது மருந்து பெட்டிகள் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அங்குள்ள செவிலியரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அந்த விசாரணையில் வாகனத்தின் ஓட்டுனர் பணிக்கு வராதது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து அலட்சியத்தன்மையுடன் பணியாற்றிய ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் தேவைக்கேற்ப அறிந்து பயன்படுத்தும் வகையில் மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramanian ordered to take action against absent govt doctor in Thirunalveli


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->