அதிர்ச்சி... விடுதி உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட தொடர் பிரச்சனை: நடந்தது என்ன?
students suddenly ill after eating hostel
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவிகள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது.
முதலில் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொடர்ந்து வாந்தி, தலைச்சுற்றல் போன்றவை ஏற்பட்டதால் மற்ற மாணவிகள் உணவை சாப்பிடவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த விடுதி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவினை ஆய்வு செய்தனர். மேலும் உணவு ஆய்வுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட 10 மாணவிகள் உடல்நல குறைவு ஏற்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் சக மாணவிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவிகளுக்கு தரமான உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
students suddenly ill after eating hostel