விடாமல் விரட்டும் நீட் தேர்வு - ஆசிட் குடித்து மாணவி தற்கொலை.!
student sucide in tiruvallur for neet exam
விடாமல் விரட்டும் நீட் தேர்வு - ஆசிட் குடித்து மாணவி தற்கொலை.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மகள் ஜெயசுதா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயசுதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஜெயசுதா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
student sucide in tiruvallur for neet exam