தோப்புக்கு அழைத்துச்சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி!
Student sexually assaulted by worker
கன்னியாகுமரி அருகே பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி, அருகே உள்ள தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தனிஸ், வெல்டிங் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது . இந்தநிலையில் தனிஸ்க்கும் ஒரு பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து அந்த மாணவி பள்ளி முடிந்ததும் மாலையில் தட்டச்சு பயிற்சிக்கு செல்லும் போது அவரை தனிஸ் சந்தித்து பழகி வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று தனிஸ் சிறுமியிடம் குளச்சல் அருகே உள் பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு அழைத்து அங்கு வந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அருகே உள்ள தோப்புக்கு அழைத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தனிஸ் மிரட்டி அனுப்பி வைத்தார்.
பின்னர் மாணவியின் நடவடிக்கையில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டதை கவனித்த தாயார் அவரிடம், 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என கேட்ட போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தனிஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே தனிஸ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Student sexually assaulted by worker