கன்னியாகுமரி: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர் படுகாயமடைந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை திவண்டாக்கோட்டையை சேர்ந்த ரெத்னகுமார் என்பவரின் மகன் டெனி (19). இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பத்திருந்தார்.

இந்நிலையில் டெனி, அதே பகுதியை சேர்ந்த ஆசீர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மணவாளக்குறிச்சி - நாகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது வெள்ளமோடி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஒன்று டெனி இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த டெனி சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணவாளக்குறிச்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student injured in twowheeler accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->