தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி கவலை இல்லை..!
sp velumani press meet about private company
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 என அரசுத் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆனது, 690 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்படைந்த 69 பேரில் 63 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்.
நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்து செய்தாலோ சம்பளம் பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துவந்தால் தான் சிகிச்சை என கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
sp velumani press meet about private company