#BREAKING || கடலூர் அருகே இளம்பெண் தற்கொலை., குளிப்பதை வீடியோ எடுத்த கொடூரன்,! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே வீடியோ எடுத்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் தெற்கு பிரச்சாரத்தில், குளிப்பதை வீடியோ எடுத்து இளைஞர் ஒருவர் மிரட்டியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சற்று முன்பு அரங்கேறி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட அந்த இளம்பெண், தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தை தற்போது போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காதலன் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி நிலையில், தற்போது அதிக கடலூர் மாவட்டத்தின் பிச்சாவரம் பகுதியில், குளிப்பதை வீடியோ எடுத்து இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south pichavaram young lady suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->