கன்னியாகுமரியில் பரபரப்பு..! சொத்துக்காக தாயை வெட்டிக்கொன்ற மகன்..! ஆபத்தான நிலையில் தந்தை...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் சொத்துக்காக மகன் தாயை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73). இவரது மனைவி அமலோத்பது. இவர்கள் சொத்துகளை மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன் மோகன்தாஸ்(51) அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் சொத்து தொடர்பாக பெற்றோருடன் மோகன்தாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய், தந்தை இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தாய் அமலோத்பது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தந்தை பவுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோகன்தாஸை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son killed mother for property in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->