சிவகாசி: சாத்தூர் அருகே மீண்டும் சோகம்... பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி..! - Seithipunal
Seithipunal


பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பட்டாசு தொழில் பிரதான தொழிலாளாக இருந்து வருகிறது.

ஆனால், இப்பகுதியில் அவ்வப்போது ஏற்படும் பட்டாசு தொழிற்சாலைகள் விபத்து மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது. கடந்த சில மாதமாகவே பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்கிறது. 

இந்நிலையில், விருதுநகர் மவ்வட்டத்தில் உள்ள சாத்தூர் வி.சுந்தரலிங்கபுரம் பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், முதற்கட்டமாக ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi Satur Firework Factory Fire Accident 1 Died Another Details awaited


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->