சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் சோகம்.. 5 பேர் பலி.. 10 பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியுள்ள சோகம் நடைபெற்றுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த வெடிவிபத்தில், பட்டாசு ஆலையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அடுத்தடுத்து தரைமட்டமாகிய நிலையில், 5 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த வெடி விபத்து தங்கராஜ் என்பவரின் பட்டாசு ஆலையில் நடைபெற்றுள்ளது. 

திருவில்லிபுத்தூர், சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வெடிவிபத்தில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட 5 பெரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi Firework Fire Accident 5 Died 10 Injured Now


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->