பெட்ரோல் குண்டு வீசி டாஸ்மாக் ஊழியர் படுகொலை! தட்டி கேட்டதால் அரங்கேறிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்ட டாஸ்மார்க் ஊழியர் அர்ஜுனன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்றாம் தேதி சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் டாஸ்மார்க் கடையில் பணியாற்றி வந்த ஊழியர் அர்ஜுனன் மீது பெட்ரோல் கொண்டு வீசி கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அர்ஜுனன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அடுத்து இந்த சம்பவத்தை கொலை வழக்கமாக பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கும்பலை தட்டி கேட்டது தொடர்பான முன் விரோதத்தில், டாஸ்மார்க் கடை ஊழியர் அர்ஜுனன் கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்புக் கோரி, உடலை வாங்க மறுத்து தற்போது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagankai TASMAC Staff Murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->