கனமழை எதிரொலி - அண்ணாமலை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு.!
sithambaram anna university exams cancelled for rain
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் பல இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த அணைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்க படுகிறது. இந்தத் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
English Summary
sithambaram anna university exams cancelled for rain