பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!! - Seithipunal
Seithipunal


தமிழக கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 12ம் வகுப்புகள்,11ம் வகுப்புக்கள் மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. பொதுத்தேர்வை இந்தாண்டு 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடக்கி ஏப்ரல் 8ஆம் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2ந் தேதி தொடக்கி 13ந் தேதி வரை நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் 12ம் வகுப்புக்கு நாளை மே 6ஆம் தேதி வெளியாகிறது. மாணவ மாணவிகள் வீட்டிலிருந்து மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள ஏதுவாக பள்ளியில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிறகு குறுஞ்செய்தி வழக்கம் போல் மதிப்பெண் விவரங்கள் அனுப்பிவைக்கப்படும்.இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு மே 10ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 exam results will be released tomorrow


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->