சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென - தீ விபத்து..!
sirukanur car fire accident
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரியும் ராகேஷ் என்பவர், திருப்பதி கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு இன்று அதிகாலை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் பயணித்த கார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்கம் புகை கிளம்பியது.
இதனையெடுத்து ராகேஷ், உடனடியாக காரை நிறுத்திவிட்டு என்னெவென்று பார்ப்பதற்க்குள், காரில் தீ மளமளவென பரவியது.
தீ பரவுவதை கண்டவுடன் சுதாரித்துக்கொண்டு, காரில் பயணம் செய்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் இருந்து அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட, ஐந்து பேருக்கு லேசான தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
sirukanur car fire accident