திடுக்கிடும் தகவல்!போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த் உடன் வேறு ஒரு நடிகருக்கும் போதைப் பழக்கம் உள்ளதா?
Shocking information Drug case Is another actor with Srikanth also addicted to drugs
தமிழக அரசு போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அவ்வகையில், சென்னையில் போதைப்பொருளை கடத்தி வந்து மொத்தமாக விற்பனை செய்பவர்களையும், அவர்களிடமிருந்து போதைப்பொருளை வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபடுவோரையும் காவலர்கள் தினமும் கைது செய்து வருகிறார்கள்.

மேலும், போதைப்பொருளை பயன்படுத்துவோரையும் பிடித்து சிறையில் தள்ளிவருகிறார்கள்.indha போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் காவலர்களிடம் சிக்குகிறார்கள்.இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் நடிகர் ஸ்ரீகாந்த் யார் மூலம் போதைப்பொருளை வாங்கியுள்ளார்? திரையுலகை சேர்ந்த எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை காவலர்கள் சேகரித்து வருகின்றனர்.இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க காவலர் திட்டமிட்டுள்ளனர்.
இதில் நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Shocking information Drug case Is another actor with Srikanth also addicted to drugs