தூத்துக்குடியில் அதிர்ச்சி...! பூட்டிய வீட்டை குறிவைத்து கொள்ளை...! - ரூ.15 லட்சம் நகைகள் மாயம்
Shock Thoothukudi Robbery targeting locked house 15 lakhs jewellery missing
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேற்கு சந்தோஷ்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நகைக் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (44), ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தருவைக்குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி கவுசல்யா (37), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்வி நிலையத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பணிச்சார்ந்த காரணங்களால் இருவரும் வெளியூர் சென்றிருந்ததால், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த சூழலில், நேற்று வீடு திரும்பிய அவர்கள் கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் என கணக்கிடப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு காவல்துறை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது.
மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை குறிவைத்து மர்ம நபர்கள் இந்த கொள்ளையை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Shock Thoothukudi Robbery targeting locked house 15 lakhs jewellery missing