மாணவிக்கு பாலியல் தொல்லை..டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!  - Seithipunal
Seithipunal


ஊட்டியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதியின்  மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை தொழிலாளியாகவும், தாய்  விடுதியிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஒருவரது மகளும்,இந்த மாணவியும் தோழிகளாக இருந்துவரும் நிலையில்  நேற்று முன்தினம் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் 7-ம் வகுப்பு மாணவி தனது தோழியான 7 வயது சிறுமியுடன் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தாள்..

பின்னர்  2 பேரும், 7 வயது சிறுமியின் வீட்டுக்கு அந்த மாணவி சென்றனர். அப்போது டிரைவர் தனது மகளின் கண் முன்னே, 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். மேலும் அவர் தனது மகளை வெளியே அனுப்பி விட்டு, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி, வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டு வந்தவுடன்  உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் டிரைவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual harassment to the student public gave a righteous kick to the driver


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->