சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல்  பெரிய பெண்கள் வரை அவர்களுக்கு பாலில் தொல்லை அளிக்கப்பட்டு வருவதை தினம்தோன்றும் செய்திகளில் பார்க்கமுடிகிறது.பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினாலும்  சில இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்தநிலையில் திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிச்சந்திரன். இவர் மே 24-ம்தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற போது அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அப்போது  அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறியதால் உடனடியாக அரிச்சந்திரன் அந்த சிறுமியை மிரட்டிவிட்டு, வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டாராம். 

இந்தநிலையில் கடந்த ஜூன் 8-ம்தேதி காலையில் மேலப்பள்ளிபத்து பஸ் நிறுத்தத்தில் சிறுமி நின்றுள்ளார்.அப்போது அங்கு வந்த அரிச்சந்திரன், பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்லக்கூடாது என மீண்டும் சிறுமியை மிரட்டிவிட்டு சென்றாராம். இதை தொடர்ந்து அந்த சிறுமி பெற்றோரிடம், உறவினரின் பாலியல் தொல்லை, மிரட்டல் குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியுடன் சென்று திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரிச்சந்திரனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual harassment of a minor Auto driver arrested under POCSO


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->