அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி.! பரபரப்பில் அரசியல் களம்.!
senthil balaji resign minister posting
தமிழகத்தின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சராக நீடித்து வந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
senthil balaji resign minister posting