அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"கடந்த ஜனவரி 1-ம் தேதியின் நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியலை தயாரித்து முழு பரிந்துரை அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படி தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், அந்த பெயர் பட்டியலில் 17(ஏ), 17(பி)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றவர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற வகைப்பாட்டின்படி பட்டியல் இருக்க வேண்டும். 

இந்த பட்டியல் தயார் செய்வதில் தவறுகள் நடைபெற்றது என்று கண்டறியப்பட்டால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

send list for promotion head master in schools education department order


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->