''வாயை வாடகைக்கு விட்ட கமல்ஹாசன்'': கிண்டலடித்த செல்லூர் ராஜூ! - Seithipunal
Seithipunal


மதுரை, விளாங்குடி முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர், சினிமா துறையில் இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர். கடந்த 31  ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி செய்து வரலாறு படைத்தது. 

சினிமா துறையில் இருந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் அவர் அழுதால் மக்கள் அழுவார்கள் சிரித்தால் சிரிப்பார்கள். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை. 

ஊழலை ஒழிப்பேன் நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கி தற்போது ஒரு தொகுதிக்காக தனது வாயை வாடகைக்கு விட்டு விட்டார். இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். 

அவர் இளைஞர். நல்ல மனம் கொண்டவர். லட்சியத்தோடு அரசியலில் வருவதாக தெரிவித்துள்ளார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர். 

இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி குறித்து எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sellur Raju teased Kamal Haasan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->