அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் சாலை விபத்தில் பலி.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னப்புளியம்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவேந்திரன் (வயது 15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் யுவேந்திரன் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது அரவக்குறிச்சி - சின்ன தாராபுரம் சாலையில் இருக்கும் எலவனூர் பிரிவில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுவேந்திரன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் யுவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School student death in road accident


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->