பெரும் பரபரப்பு! நடு வழியில் நடந்த சம்பவம்! சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் இருந்த சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவர் மயக்கம் அடைந்ததாகவும், இதன் காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அந்த  உதகை புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரில், சவுக்கு சங்கர் மீது, உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ் இனியன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில், நீதிபதி, ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன் படி போலீசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar admitted in hospital july


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->