சவுதியில் விலங்குடன் பாலியல் கொள்ளுமாறு அடி...! கணவரை மீட்டு தர மனு...!
Saudi Arabia a woman was beaten to have sex with an animal Petition to get her husband back
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் மனு கொடுக்க வந்த, பெரியதும்பூர் பகுதியை சேர்ந்த உதயஜோதி என்பவர். அவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது,"எனது கணவர் கவாஸ்கர் கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

பாலைவனத்தில் அவருக்கு ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்து உள்ளனர். அங்குள்ள 50 வயது மதிக்கத்தக்க அரேபிய பெண்ணை வைத்து கணவருக்கு அடிக்கடி உல்லாசமாக இருக்க தெரிவித்தும் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் விலங்குகளிடமும், பாலியல் தொல்லை செய்யச்சொல்லி அடித்துள்ளனர். இந்த கொடுமைகள் குறித்து என்னிடம் போனில் தெரிவித்து கதறி அழுதார். இருக்கும் இடத்தை கூட எனது கணவரால் தெரிவிக்கமுடியவில்லை.
எனவே சவுதி அரேபியாவில் பலவிதங்களில் பாலியல் தொல்லைகளை அனுபவித்து வரும் எனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது கணவரை பத்திரமாக கொண்டுவர வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
Saudi Arabia a woman was beaten to have sex with an animal Petition to get her husband back