தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதிக்கு செல்ல தடை.!!
Saturday and Sunday not allowed in yercaud
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தபட்டு வந்த ஊரடங்கின் காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தது. இதையடுத்து, தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது. பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் மெல்ல மெல்ல ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏற்காட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப்பயணிகள் வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் வியாபாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து ஏற்காடு செல்லலாம் என்றும், பிற நாட்களில் ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்று அவசியம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Saturday and Sunday not allowed in yercaud