சற்றுமுன் : பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா!
sasikala unwell admitted in hospital
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எப்பொழுது வெளியே விடுதலை ஆவார் என்ற கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்பது உறுதியானது.
ஜனவரி 27ஆம் தேதி அவர் எத்தனை மணிக்கு விடுதலை ஆகிறார் என்பது குறித்து, கர்நாடக சட்டத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு கர்நாடக சிறைத்துறை, மின்னஞ்சல் மூலமாக தகவல் அளித்துள்ளது.
அதன்படி வருகிற ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சிறை மருத்துவர்கள் விரைந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது அவரது விடுதலையை எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sasikala unwell admitted in hospital