காமுகனின் ஆசையால் பச்சிளம் குழந்தையை எரித்து கொலை செய்த பெண்.. வெளியான பரபரப்பு வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் இரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள தியேட்டர் வளாகத்தில், பச்சிளம் குழந்தையொன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட குழந்தை அங்குள்ள குமரன் நகர் பகுதியை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மகள் சங்கரகோமதிக்கு (வயது 22) பிறந்தது என்று தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் முடியாமல் குழந்தையை அவர் பெற்றெடுத்தால், பச்சிளம் குழந்தையை சங்கரகோமதியின் தாயார் இந்திராணி (வயது 45) மற்றும் சங்கரகோமதி சேர்ந்து தீ வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. 

இந்த விசாரணையில், சங்கரகோமதியின் காதலன் மாரிசாமி என்பவரின் மகன் சங்கரையும் (வயது 22) கைது செய்தனர்... இந்த விசாரணையில், " எனது தந்தை சண்முகவேல் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

நான் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள செருப்பு கடையில் பணியாற்றி வந்தேன். எனக்கும், சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறிய நிலையில், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தேன். இதனால் நான் கர்ப்பமான நிலையில், இதனை சங்கரிடம் தெரிவித்தேன். 

அதற்கு சங்கர், நாம் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்று கூறி திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்தான். பின்னர் சில மாதங்களில் என்னை திருமணம் செய்ய முடியாதென்று கூறினான். இந்த விஷயத்தை எனது குடும்பத்தினர் அவமானமாக கருதியதால், வேறு வழியின்றி பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தேன். 

எனது பெற்றோரும் தங்கியிருந்த வீட்டினை காலி செய்து, சங்குபுரம் பகுதியில் வாடகைக்கு குடிபெயர்ந்து சென்றோம். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக வீட்டிலேயே குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை கொலை செய்ய அனைவரும் திட்டமிட்டோம். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு, தியேட்டர் வளாகத்திற்கு சென்று குழந்தையை கொலை செய்தோம் " என்ற வாக்குமூலமானது வெளியாகியுள்ளது. 

இதுவும் நாடக காதலே.. அங்கு கேள்விக்குறியாகியுள்ளது ஒரு பெண்ணின் வாழ்க்கை.. இளம் வயதில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு என்பது இயல்பானது என்றாலும், திருமணத்திற்கு முன்னான உறவு எந்த விதமான பிரச்சனையை ஏற்படுத்தி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிந்தனை செய்து செய்யும் விஷயமே எதிர்காலத்தினை நல்வழிப்படுத்தும் என்பதே நிதர்சனம்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sankarankoil child murder case Police Investigation Report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->