சோகம்! கழிவு நீர் விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் திருச்செந்தூர் நகராட்சியில்  'மணி' என்பவர் ஒப்பந்த தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில்  இன்று காலை, மணி அவர்கள் சக பணியாளர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள பாதாள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராமல் பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் மணி தவறி விழுந்துள்ளார். அப்போது, அவரை விஷவாயு தாக்கியுள்ளது. இதில், தூய்மைப்பணியாளர் மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதில் விஷவாயு காரணமாக உயிரிழந்த மணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sanitation worker died after being exposed to toxic waste gas


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->