லாரிகள் நிறுத்தமாக மாறிய சங்ககிரி பஸ் ஸ்டாண்ட்: 16 வருடமாகியும் நடவடிக்கை இல்லை..?
Sangakiri Bus Stand Turned into a Truck Stop
கடந்த 2009- ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது சங்ககிரி சேலம் மாவட்டம் சங்ககிரியில் புது பஸ் ஸ்டாண்டை ஒன்றை திறந்து வைத்தார். தற்போது 16 ஆண்டாகியும், சங்ககிரி புது பஸ் ஸ்டாண்ட் இன்னமும் பயன்பாட்டுக்கு வராமல், லாரிகள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
குறித்த பஸ் ஸ்டாண்ட் திறந்த தொடர்ந்து சில நாட்கள் டவுன் பஸ்கள் மட்டும் வந்தன. பின்னர் பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோரத்தில் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்கின்றன. அதன் பின் ஆட்சி மாறிய போதும், இந்த பஸ் ஸ்டாண்ட் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதனால், அங்கு கடை எடுத்த வியாபாரிகள், கடைகளை மூடி வைத்துள்ளதோடு, சிலர், கடையே வேண்டாம் என, நகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டனர். இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டும் கூட, பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அத்துடன், அங்குள்ள கடைகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால், கட்டடங்களும், பஸ் ஸ்டாண்டின் கான்கிரீட் தளங்களும் சேதம் அடைந்து வருவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் திறந்து, 16 ஆண்டாகியும் தற்போது வரை பயன்பாட்டில் இல்லாததால் லாரிகள் நிறுத்தும் இடமாகவே மாறிவிட்டது. இவ்வாறு அதிகளவில் லாரிகள் வந்து செல்வதால், சாலையும் சீரழிந்து வருகிறதாக கூறப்படுகிறது.

இந்த பகுதியின் நகராட்சி தலைவியாக, தி.மு.க.,வை சேர்ந்த மணிமொழி இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேலம் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சங்ககிரி நகராட்சி பொறியாளர் நடராஜன் கூறுகையில், ''நகராட்சி கமிஷனர் விடுமுறையில் உள்ளார். அவர் வந்ததும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறியுள்ளார்.
English Summary
Sangakiri Bus Stand Turned into a Truck Stop