#திருவாரூர் || குடிசைக்குள் புகுந்த மணல் லாரி.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மணலை இறக்கிவிட்டு திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

தென்னவராயநல்லூர் பகுதியில் வந்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது உரசி, அருகில் இருந்த வீட்டுக்குள் சுவரை இடித்துக் கொண்டு நுழைந்தது.

இதில், வீட்டில் இருந்த ராஜா, அவரது மனைவி மீனா மற்றும் அவரது மைத்துனர் நேதாஜி ஆகியோர் காயமடைந்துள்ளனர். லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த திருவாரூர் காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sand load lorry accident in thiruthuraipoondy


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->