#சேலம் | மாமூல் வசூலிப்பதில் திமுக - அதிமுக இடையே மோதல்! 6 பேருக்கு லேசான காயம்?! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே கோவில் திருவிழா கடைகளில் மாமுல் வசூலிப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியில் கோவில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கடைகளில், யார் மாமுல் வசூலிப்பது என்ற போட்டியில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

பள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, கோவில் அருகே தற்காலிக கடை போடப்பட்டுள்ளது. இந்த கடை இந்த வணிகர்களிடம் ஒரு தரப்பினர் மாமுல் வசூல் செய்ததாகவும், அதனை மற்றொரு தரப்பினர் தட்டி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தரப்பினருக்கும், திமுக நிர்வாகி காமராஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதில் ஆறு பேருக்கு லேசன காயம் ஏற்பட்டது. இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்த போலீசார், அது முடியாததால் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து இரு தரப்பினர் இடமும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, காவல் நிலையம் முன்பு இரு தரப்பு ஆதரவாளர்களும் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem pallapatti DMK ADMK Clash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->