அன்பு கணவனை பாசம் எனும் துரோகத்தால் வீழ்த்திய மனைவி.. 50 நண்பர்களுடன் அதிரவைக்கும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்மணி காவல்துறையினர் வசம் சிக்கியுள்ள நிலையில், அவருடன் முகநூலில் தொடர்பில் இருந்த 50 ஆண் நண்பர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு அருகே வாழை இலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், பி.பி.ஏ படித்த அக்கா மகளான ஷாலினி (வயது 24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு நேரத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே வந்த சாலினி, கொள்ளையர்கள் கணவரை தாக்கி விட்டதாகக் கூறி சத்தமிட்டபடி அவசர உதவிக்கு தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அவசர ஊர்தி பணியாளர்கள், பிரபுவை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கு தகவல் செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 

இதன் பின்னர் ஷாலினி உறவினர்கள் உதவியுடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் தனது சங்கிலியை பறிக்க முயன்றதாகவும், தடுக்க வந்த கணவரை அவர்கள் தாக்கிய நிலையில், மயங்கி விழுந்த கணவரை அவசர ஊர்தி பணியாளர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும், கொள்ளையளை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பிரபுவின் உடலை அனுப்பி வைத்தனர். சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஆனந்த் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், 20 முதல் 30 பேரிடம் ஷாலினி பேசி வந்தது தெரியவந்ததால் அவரின் பக்கம் விசாரணை திரும்பியுள்ளது. 

அவரது முகநூலை பார்க்கையில் 50 க்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களும் பழகி வந்தது கண்டறியப்பட்ட நிலையில், விசாரணையில் திருச்சியை சார்ந்த நண்பர் காமராஜ் என்பவருடன் சேர்ந்து கணவர் பிரபுவை கொலை செய்ததை ஷாலினி ஒப்புக்கொண்டுள்ளார். 

திருமணத்திற்கு முன்னர் அலைபேசி என்ற ஒன்றை பார்க்காத அக்காள் மகள் ஷாலினி மீது அன்பு கொண்ட பிரபு, தனது மனைவி ஷாலினிக்கு அன்போடு ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிய ஷாலினி முகநூலில் மூழ்கிக் கிடந்த நிலையில், 50 க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துள்ளார். பலருடன் பழகி வந்த நிலையில், திருச்சி உறையூரைச் சேர்ந்த ஆண் நண்பர் காமராஜ் ஷாலினியின் வீட்டிற்கு வரும் அளவும் நெருங்கி இருந்துள்ளார்.

மாதத்திற்கு இரண்டு முறை பிரபு வெளியூர் செல்லும் நேரங்களில், தனது திருச்சி நண்பரை நேரில் வீட்டிற்கு அழைக்கும் ஷாலினி, அவருடன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவல் அரசல் புரசலாக பிரபுவின் காதுகளுக்கு எட்டவே, ஷாலினியை கண்டித்து அவரின் அலைபேசியை வாங்கி வைத்துள்ளார். இதன்பின்னர், ஷாலினி மற்றொரு அலைபேசியை கணவனுக்கு தெரியாமல் வாங்கி வைத்து நண்பர்களுடன் சவகாசத்தை தொடர்ந்து வந்துள்ளார். 

இதனால் கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் மனம் உடைந்து போன பிரபு தனது வாழை இலை கடையிலேயே தங்கி கொள்ளவும் ஆரம்பித்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனது காதலனிடம் கணவன் தொடர்பாக தெரிவித்த ஷாலினி, பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த ஒரு வாரம் பிரபுவிடம் அன்பை பொழிந்து வீட்டில் படுக்கவைத்து பார்த்துக்கொண்ட சாலினி, தங்களின் திட்டப்படி திங்கட்கிழமை நள்ளிரவில் காமராஜை வீட்டிற்கு வரவழைத்து, பிரபுவின் முகத்தில் தலைவை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். 

பின்னர் காதலனை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்த ஷாலினி, கதறியழுது கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனையடுத்து, திருச்சியைச் சார்ந்த முகநூல் காதலன் காமராஜை தேடி சென்ற தனிப்படை காவல் துறையினர், அவனை கைது செய்து சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். அன்பான கணவன் கிடைத்தும் முகநூல் என்ற மாய உலகில் சிக்கி கள்ளக்காதல் பழக்கத்தால் மனமுடைந்த கணவனுக்கு திருந்தியது போன்று ஆசை காண்பித்து பெண் அரங்கேற்றிய கொடூர கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • கர்மா உலகில் மிகச்சிறந்த ஆற்றலை கொண்டது. தான் செய்த வினைக்கு பதில் சொல்லும் காலம் விரைவில்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Man Prabhu Aged 39 Murder by Wife due to Affair She Have 50 Friends Connection on Facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->