கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத திருமண வீட்டார் - ஆப்படித்த சேலம் மாநகராட்சி.!
Salem 3 Marriage Hall Sealed by Salem Municipality Corporation 25 April 2021
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 3 திருமண மண்டபங்களை மூடி சீல் வைத்த அதிகாரிகள், தலா ரூ.50 ஆயிரம் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதித்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு போன்றவற்றை அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இன்று (25/04/2021) திருமண நாள் என்பதால், திருமணத்திற்கு செல்பவர்கள் பத்திரிகை இருந்தால் மட்டுமே திருமண நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 3 திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து இருக்கின்றனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 தனியார் திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்ற நிலையில், அங்கு வந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவற்றை மக்கள் கடைபிடிக்கவில்லை.
திருமண மண்டபங்களுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்ட சேலம் மாநகராட்சி அதிகாரிகள், அங்கு கொரோனா விதிமுறைகள் கடைப்பிக்காத காரணத்தால் சீல் வைத்து மண்டபத்தை பூட்டினர். மேலும், மண்டபங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர்.
முன்னதாகவே தமிழக அரசு திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெற்றால், அங்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் கொரோனா வழிகாட்டுதலை கடைபிடிக்கிறார்களா? என்பதை திருமண மண்டப நிர்வாகிகள் சோதனை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Salem 3 Marriage Hall Sealed by Salem Municipality Corporation 25 April 2021