தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.!
RSS class Don't allowed in TN schools
தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, பள்ளி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இதரிடையே தமிழகத்தில் தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அணிவகுப்பு நடந்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் வகுப்பு களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு எதிராக நாம் செயல்படக்கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
English Summary
RSS class Don't allowed in TN schools