திருப்பூர் || பணம் நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி, கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!
Robbers killed the old lady
மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சோளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலன். இவரது மனைவி முத்துலெட்சுமி. கோபாலன் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவதன்று இவர் வீடு திரும்பும் போது அவரது வீடு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அவரது மனைவி கொலைசெய்யப்பட்ட தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தார்.
மேலும், அவரது வீட்டில் இருந்த 42 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததது. உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த வீட்டிற்கு பிளம்பிங் வேலைக்கு வந்த அருண்குமார், அமரன், தினேஷ்குமார் ஆகியோர் அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
English Summary
Robbers killed the old lady