தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!
relations attack private hospital
கன்னியாகுமரி அருகே பிரசவத்தின் போது இறந்த இளம் பெண்ணின் உடலை வாங்க மறுத்து தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் கல்லுாரி ரோடு சுரேஷ்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பவித்ரா, கொட்டாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை 7.00 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால், அதிக ரத்தபோக்கு காரணமாக பவித்ரா உயிர் இழந்துவிட்டார் என தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கவே, பவித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை முருகன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், பவித்ராவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி விட்டு, நீதி கிடைக்காமல் பவித்ராவின் உடலை வாங்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
English Summary
relations attack private hospital