ராமேஸ்வரத்தில் மீண்டும் வெடிகுண்டு புதையலா?  உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய ரகசிய தகவலால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் அருகே குவியல் குவியலாக வெடிகுண்டு புதைக்கப்பட்டு இருப்பதாக, உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய ரகசிய தகவலை அடுத்து, சென்னையில் இருந்து சிறப்பு வெடிகுண்டு சோதனை மற்றும் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட தகவல் படி ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் கடற்கரை பகுதி மற்றும் பனங்காடு பகுதிகளில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு இருப்பதாக ஒரு ரகசிய தகவல் நேற்று நள்ளிரவு உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சென்னையில் இருந்து வெடிகுண்டு சோதனை மற்றும் தடுப்பு பிரிவினர் படையினர், உளவுத்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறையின் சிறப்பு பிரிவு உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் இன்று சோதனையில் இறங்கியுள்ளனர்.

தங்கச்சிமடம், அக்கா மடம், பாம்பன் துங்குவாள் பகுதிகளில் இந்த வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பனங்காடு பகுதிகளிலும், மணல்மேடு உள்ள பகுதிகளிலும் தற்போது சோதனை மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே தங்கச்சிமடம் பகுதியில், மணலில் குவியல் குவியலாக வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramshwaram police search in sea area


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->