நண்பனை கொலை செய்து மணலில் புதைத்து, ஊராரிடம் ஊமை நாடகம்..! இராமநாதபுரத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!!
Ramanathapuram Rameswaram Friend Murder Another One When Liquor Drinking Fight Last year Police arrest
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை அடித்துக்கொலை செய்த அந்த 4 நான்கு நண்பர்கள் ஊராரிடம் ஆடிய நாடகம் ஒரு வருடம் கழித்து வெட்டவெளிச்சமாகி 3 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ளவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் சின்னவன்பிள்ளை தெரு பகுதியை சார்ந்தவர் மணிராஜ். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 19 வயதாகும் கணேஷ் ராஜ் என்ற மகன் இருக்கிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதனையடுத்து, பெற்றோர்கள் இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கணேஷ் ராஜ் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இறுதியாக, காவல்துறை அதிகாரிகள் கணேஷ் ராஜ் செல்போன் சிக்னல் எங்கு சென்றுள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்துகையில், அவர் இறுதியாக செம்மடம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது.
கணேஷ் ராஜின் சில நண்பர்களின் என்னும் அதே பகுதியில் இறுதியாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கணேஷ் ராஜின் நண்பர்களான மைக்கேல் அஜித், அஜித் குமார், சேரன் ஆகிய 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மதுபானம் அருந்தி வந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேஷ் ராஜை தலையில் கல்லால் அடித்துள்ளனர்.
தலையில் ஏற்பட்ட காயத்தால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கணேஷ் ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கடற்கரையில் உள்ள மணல் பகுதியில் குழிதோண்டி புதைத்து விஷயத்தை மறைத்துள்ளார். இந்த குற்ற வழக்கில் மைக்கேல் அஜித், அஜித் குமார், சேரன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சதீஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Rameswaram Friend Murder Another One When Liquor Drinking Fight Last year Police arrest