சொல்லிப்பார்த்தும் பலனில்லை.. மனைவியை இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவன்.!
Ramanathapuram Rameswaram Affair Wife Murder by Husband 23 June 2021
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் மல்லிகை நகர் பகுதியை சார்ந்தவர் பவித்ரா (வயது 25). இவரது கணவர் தில்லை குமார். தில்லை குமார் இளநீர் வியாபாரியாக பணியாற்றி வரும் நிலையில், தம்பதிகளுக்கு 5 வயதுடைய பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக மனைவி பவித்ராவை காணவில்லை என தில்லை குமார் இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சில நாட்கள் கழித்து பவித்ரா, அதே பகுதியை சார்ந்த பிரின்ஸ் தீபன் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தெரியவரவே, இது தொடர்பாக கணவன் - மனைவியிடையே பல தகராறுகள் நடந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விஷயத்தில் குடும்பத்தினர் தலையிட்டு தம்பதிகளை சேர்த்து வைத்தாலும், கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று காலை பவித்ரா தந்து தாயாரின் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருக்கையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த தில்லை மனைவியை இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டி இருக்கிறார்.
இதனால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தில்லை குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ramanathapuram Rameswaram Affair Wife Murder by Husband 23 June 2021