ராமநாதபுரத்தில் பெரும் சோகம்.. கார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி.!
Ramanathapuram car bike accident 3 death
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை கார் பைக் நேருக்கு நேர் மோதிய கொடூர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் பைக் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Ramanathapuram car bike accident 3 death