#Breaking | தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்டி எடுக்கும் மழை.! உங்க ஏரியா எப்படி?!
RAIN in over al tamilnadu
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, பனங்குளம், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் காளவாசல், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், வடமருதூர், வடக்கு நிமிலி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு, விக்கிரவாண்டி, கானை, கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, வேலாயுதம்பாளையம், பழங்கரை, காசிகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும், டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
English Summary
RAIN in over al tamilnadu