ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை! கையும் களவுமாக சிக்கிய ஜார்கண்ட் தம்பதி! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நந்தினி கண்காகர்-லங்கேஸ்வர் தம்பதி நேற்றிரவு குழந்தையுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். 

நள்ளிரவு 1 மணி அளவில் குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரயில் நிலையத்தில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர்கள் 2 பேர் தூக்கிச் செல்வது போன்ற காட்சி பதிவாக்கியிருந்தது. இதனை அடுத்து போலீசார் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில் சுமார் 4 மணி நேரம் தேடுதலுக்கு பின்பு கடத்தப்பட்ட குழந்தை குன்றத்தூரில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் குழந்தையை கடத்திச் சென்றது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல் மற்றும் நமீதா தம்பதியினர் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

railway station kidnapped 1year child rescue police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->