புதுக்கோட்டையில் அடுத்த கொடூரம்.. 7 வயது சிறுமி பலாத்காரம்.. மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரச்சனை பெரும் அதிர்வலையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, கொடூர கொலையும் அரங்கேறியது. 

இந்த நிலையில், கந்தர்வகோட்டையில் அடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியை சார்ந்த 7 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியை சார்ந்த அரவிந்த் (வயது 20) என்ற காமுகன், சிறுமியை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடியுள்ளான். 

ஆனால் சிறுமிக்கு அதிகளவு உதிரப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் சிறுமி மயக்க நிலையில் இருந்துள்ளார். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்கள் மகளின் நிலையை கண்டு, அலறியடித்து அங்குள்ள புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், கொடூரன் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமி வாக்குமூலம் அளித்த பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Gandharvakkottai child girl abuse police arrest age 20 culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->