"சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்"... போஸ்டரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றியடைந்து ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று இருக்கிறார். தமிழகத்தின் எதிர்கட்சியாக அதிமுக மாறியுள்ள நிலையில், எதிர்க்கட்சி சட்டப்பேரவை தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் பெயரில் சசிகலாவை தலைமையேற்க அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படத்துடன் சசிகலாவின் புகைப்படத்தையும் சுவரொட்டியில் பதிவு செய்துள்ளனர். 

இந்த சுவரொட்டியில், " கழகத்தை காத்திட வாரீர்.. புரட்சி தலைவர் உருவாக்கிய, புரட்சி தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை தியாக தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம். இவன் அதிமுக புதுக்கோட்டை மாவட்டம் " என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. 

ஏற்கனவே சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா விடுதலைக்கு பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai AIADMK Supporters Call Sasikala to AIADMK 10 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->