10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24ம் தேதி முதல் பெற்றுகொள்ளலாம்.. ! - Seithipunal
Seithipunal


10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிகல்விதுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கானப் பொதுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகள் என 8 லட்சம் பேர் பொது தேர்வை எழுதினர். அதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே 10ம் வகுப்பு பொதுதேர்வை9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதினர். அவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை தெர்வித்துள்ளது.

இந்நிலையில், மறுக்கூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 29ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Provisional marksheets For 10th and 12th Std


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->