காதல் விவகாரம்: தனியார் நிறுவன ஊழியர் விபரீத முடிவு..! கிருஷ்ணகிரியில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத உடுப்பா. இவரது மகன் ஸ்ரீ ஆதர்ஷ்(26) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீ ஆதர்ஷ் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீ ஆதர்ஷ், அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் ஸ்ரீ ஆதர்ஷின் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீ ஆதர்ஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் ஸ்ரீ ஆதர்ஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ஸ்ரீ ஆதர்ஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private company employee commits suicide in kirishnagiri


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->