மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற கைதி தப்பியோட்டம்.. காவல்துறை தேடுதல் வேட்டை...! - Seithipunal
Seithipunal


மருத்துவமபரிசோதனையின் போது தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தேடி வ்ருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம்  கஞ்சா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கேஷ், நாகராஜை கத்தியால் வெட்டினார்.  இதில் படுகாயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து புகார் அளித்த பிரபு என்பவர்,  வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொரோனா பரிசோதனை செய்ய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, விக்னேஷ் வாகனத்தில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார். காவல்துறையினர் அவரை பிடிக்க முயன்றனட். ஆனால், அவர் மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prisoner escaped


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->