முன்விரோதம் தீவிரம்…! கார் டிரைவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீச்சு! - 'எரித்து கொன்று விடுவோம்’ என மிரட்டல்
Previous enmity intensifies Petrol bomb thrown at car driver house Threatened burn him death
புதுச்சேரி நகரில் பரபரப்பை கிளப்பிய பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைனார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39), தொழிலாக கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திலீப் (19), சூரியா (19) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், திலீப், சூரியா மற்றும் மேலும் ஒருவருடன் பைக்கில் ரமேஷின் வீட்டின் அருகே வந்தனர்.

திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீட்டை நோக்கி வீசினர். அது வீட்டின் முன்பகுதியில் விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைத் தொடர்ந்து கற்களை எறிந்து வீட்டை சேதப்படுத்தியதில் கதவு உடைந்தது.
இந்த அதிர்ச்சி சத்தம் கேட்டு ரமேஷின் தாய் வெளியே வந்தபோது, அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்வதாக மிரட்டியதும், தாக்குதலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ரமேஷ் முதலியார்பேட்டை காவல் நிலையம் காவலர்களிடம் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி காவல்துறை தப்பியோடிய திலீப், சூரியா உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Previous enmity intensifies Petrol bomb thrown at car driver house Threatened burn him death